
புதுடெல்லி: இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதலின் போது பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கிய துருக்கிக்கு, பதிலடி கொடுக்கும் விதமாக துருக்கி ஆப்பிளை புனே வியாபாரிகள் புறக்கணித்துள்ளனர்.
இந்தியா-பாகிஸ்தான் மோதலில் துருக்கி ட்ரோன்களை அனுப்பி பாகிஸ்தானுக்கு உதவியதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கிய துருக்கிக்கு, பதிலடியளிக்கும் விதமாக துருக்கி ஆப்பிளை இந்திய வியாபாரிகள் புறக்கணித்துள்ளனர். இதன் காரணமாக துருக்கிக்கு 1000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.