
ஹூக்லி: “பாகிஸ்தானிடம் பிடிபட்டிருந்த எனது மகனை மத்திய, மாநில அரசுகள் மீட்டுத் தந்திருக்கின்றன, அனைவருக்கும் நன்றி.” என்று பிஎஸ்எஃப் வீரர் பி.கே. ஷாவின் தந்தை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 23-ம் தேதி எல்லையை தாண்டியதாக பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பி.கே.ஷா இன்று (மே.14) இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில், அவரது தந்தை மற்றும் மனைவி மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.