• May 14, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: சீன அரசு ஊடகமான க்ளோபல் டைம்ஸின் எக்ஸ் கணக்கை இந்திய அரசு முடக்கியுள்ளது. அதேபோல், துருக்கியின் டிஆர்டி வோர்ல்ட்-ன் எக்ஸ் கணக்கும் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. தவறான தகவல்களை வெளியிடுவதற்கு முன்பு உண்மைகளை சரிபார்த்து, ஆதாரங்களை மறுவிசாரணை செய்யுமாறு சீனாவை இந்தியா எச்சரித்திருந்த சில நாட்களுக்கு பின்பு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை (மே 7 ) சீனாவில் உள்ள இந்திய தூதரகம் அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “டியர் க்ளோபல் டைம்ஸ் ஊடகத்துக்கு, தவறாக வழிநடத்தும் செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு, உண்மைகளை சரிபார்த்து, உங்களின் ஆதாரங்களை குறுக்கு விசாரணை செய்து கொள்ளுங்கள் என்று நாங்கள் உங்களுக்கு பரிந்துரைக்கிறோம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *