
ஆதம்பூர்: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்திய விமானப் படை தளத்தில், வீரர்களுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார்.
பஞ்சாபின் ஆதம்பூரில் இந்திய விமான படைத்தளம் உள்ளது. இங்கு எஸ் 400 ஏவுகணைகள் நிலை நிறுத்தப்பட்டு உள்ளன. இது மிக் 29 ரக போர் விமானங்களின் படைத்தளம் ஆகும். இந்தியா, பாகிஸ்தான் போரின்போது ஆதம்பூர் விமான படைத் தளம் மீது அதிதீவிர தாக்குதல்களை நடத்தினோம். எஸ் 400 ஏவுகணைகளை தகர்த்தோம், மிக் 29 ரக போர் விமானங்களை அழித்தோம் என்று பாகிஸ்தான் ராணுவம் வதந்திகளை பரப்பியது.