
சென்னை: பேராசிரியர் வருகை பதிவு குறைவு, பேராசிரியர்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களுக்காக தமிழகத்தின் 35 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாடுமுழுவதும் மருத்துவ கல்லூரிகள் மற்றும் அதனுடன் இணைந்த மருத்துவமனைகளில் மருத்துவர்கள், மருத்துவ பேராசிரியர்களின் வருகையை பதிவு செய்ய ஆதாருடன் கூடிய பயோமெட்ரிக் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதில், குறைந்தபட்சம் பேராசிரியர்கள், கல்லூரி அலுவலர்களின் வருகைப் பதிவு 75 சதவீதம் இருக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் அங்கீகாரத்துக்கு அனுமதி அளிக்கப்படாது.