
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 லஷ்கர் தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.
இதுகுறித்து ராணுவம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஷ்மீரின் ஷோபியான் மாவட்டம் ஷூகால் கெல்லர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவினர் உளவு தகவல் கொடுத்தனர். இதன் அடிப்படையில் அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.