
“வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில், வேட்பாளர்கள் யார் என்பதை தலைமை முடிவு செய்யும். வெற்றி பெறுபவர்களே வேட்பாளராக நிறுத்தப்படுவர். தகுதியானவர் களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றி பெற உழைக்க வேண்டியது உங்கள் (மாவட்டச் செயலாளர்கள்) கடமை” அண்மையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் தேர்தலுக்கான தனது ஆக் ஷன் பிளானை இப்படி அறிவித்தார்.
அதிமுக – பாஜக கூட்டணி, தவெக-வின் எழுச்சி இவற்றோடு அமலாக்கத்துறை, நீதிமன்ற நடவடிக்கைள் மற்றும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகளால் ஆளுங்கட்சிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த நெருக்கடிகளை சமாளித்து தேர்தலில் வென்று ஆட்சியைத் தக்கவைக்க ஆயத்தமாகி வருகிறது திமுக தலைமை.