
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக 9 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அமிர்தசரஸ் மாவட்டம் அமிர்தசரஸ் அருகே மஜிதியா பகுதியில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த கள்ளச்சாராயத்தை பங்கலி, படல்புரி, மராரி கலான், தெரேவால் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பலர் குடித்துள்ளனர்.