
சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் பல்வேறு பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வாயிலாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பதவிகளுக்கு 174 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.