
ராமேசுவரம்: ‘வெசாக்’ தினத்தையொட்டி இலங்கை சிறையில் தண்டனை அனுபவித்து வந்த 9 தமிழக மீனவர்கள் இன்று (மே 13) விடுதலை செய்யப்பட்டனர்.
புத்த பெருமான் பிறந்தது, ஞானமடைந்தது மற்றும் இறந்தது என மூன்று முக்கிய நிகழ்வுகளும் ‘வெசாக்’ மாத பவுர்ணமி நாளிலேயே நிகழ்ந்தது. இதனைச் சிறப்பிக்கும் வகையில் இலங்கையில் பவுத்த மக்கள் ‘வெசாக்’ மாதத்தில் வரும் பவுர்ணமி தினத்தை ‘வெசாக்’ பண்டிகையாக மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.