
திண்டுக்கல்: “புகார் கொடுப்பவர்கள் பெயர், விபரங்களை ரகசியமாக வைத்து உரிய நீதியை பெற்றுக்கொடுப்போம், என்ற அணுகுமுறை விசாரணையில் இருந்துள்ளது வரவேற்கத்தக்கது,” என முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் இந்து தமிழ் திசை நாளிதழக்கு, மா.கம்யூ., கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான பாலபாரதி அளித்த பேட்டியில், “பொள்ளாச்சி பாலியல் வழக்கு மிக முக்கியமான வழக்கு. இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியில் வரமுடியவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் புகார் கொடுத்தாலும் போலீஸ் நிலையத்தில் புகாரை வாங்க முன்வராதநிலை இருந்தது. இந்த சூழ்நிலையில், ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்தப்பட்டன.