
சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை தொகுத்து வழங்கினார் ஐஸ்வர்யா ரகுபதி. இந்தச் சந்திப்பின்போது, “இது கோடைக்காலம் என்பதால் அனைவரும் நிறைய தண்ணீர் குடியுங்கள்” என்று குறிப்பிட்டார். அப்போது நிருபர் ஒருவர் “நீங்கள் அணிந்திருக்கும் உடை வெயில் நேரத்துக்கு உகுந்தது தானா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு “நீங்கள் கேட்கும் கேள்வி இங்கு சம்பந்தமில்லாதது” என்று குறிப்பிட்டார் ஐஸ்வர்யா ரகுபதி.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இது தொடர்பாக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா ரகுபதி. அதில் “இன்றும் நம் சமூகத்தில் பல ஆண்கள் ஆண் என்கிற அகந்தையையும், ஆணாதிக்கத்தையும் தாங்கி நடப்பது மனதை உலுக்குகிறது. இன்னும் ஏமாற்றமளிப்பது என்னவென்றால், ஒரு நிருபர் போன்ற அறிவார்ந்தவர் அப்படி நடப்பதுதான்.