
ராமேசுவரம்: ராமேசுவரம் ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமா் மோடி கடந்த ஏப்.6-ம் தேதி திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து, ஏப். 7-ம் தேதியிலிருந்து ராமேசுவரத்திலிருந்து மதுரைக்கு தினசரி 3 பயணிகள் ரயில்கள்,சென்னைக்கு தினசரி 3 விரைவு ரயில்கள், திருச்சிக்கு 1 விரைவு ரயிலும் ராமேசுவரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்கின்றன.