
சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கிகள் இல்லாததால் தலைமைச் செயலகத்துக்கு செல்லும் அரசு ஊழியர்கள், பாரிமுனைக்கு செல்லும் பொதுமக்கள் சிரமப்பட்டு படியேறி செல்ல வேண்டிய நிலையுள்ளது. சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித் தடத்தில் தினசரி 300-க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இவற்றில் பயணம் செய்கின்றனர்.
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு, சென்னை கடற்கரை-வேளச்சேரி ஆகிய இரு வழித்தடங்களில் உள்ள கோட்டை ரயில் நிலையம் பிரதான ரயில் நிலையமாக திகழ்கிறது. தலைமைச் செயலகம், உயர்நீதிமன்றம், ரிசர்வ் வங்கி ஆகியவற்றில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் பாரிமுனைக்கு செல்லும் பொதுமக்கள் இந்த ரயில் நிலையத்தைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.