• May 13, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘தமிழரசு’ இதழ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் மார்பளவுச் சிலையை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தோற்றுவிக்கப்பட்ட ‘தமிழரசு’ இதழ் 55-வது ஆண்டை நிறைவு செய்கிறது. இதையொட்டி கடந்த 2023 ஜூன் மாதம் நடைபெற்ற செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மண்டல இணை இயக்குநர்களின் பணி ஆய்வுக் கூட்டத்தில், முதல்வரின் ஆலோசனைப்படி தரமணியில் உள்ள தமிழரசு அச்சக வளாகத்தில் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவாக ‘கலைஞர் நூற்றாண்டு தோரணவாயில்’ மற்றும் கருணாநிதியின் மார்பளவுச் சிலை ஆகியவற்றை அமைக்க முடிவு செய்யபட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *