
மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாமக மாநாட்டின் மூலம் அப்பகுதியில் குவிந்த குப்பையை அகற்றும் தூய்மை பணிகளில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் ஈடுபட்ட நிலையில், கூட்டணிக்காக மாநாட்டை நடத்தவில்லை என அன்புமணி தெரிவித்தார்.
மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற்றது. இந்நிலையில், திருவிடந்தை மாநாட்டு திடலுக்கு நேற்று வருகை தந்த பாமகவின் தலைவர் அன்புமணி தூய்மை பணியில் ஈடுபட்டார்.