
புதுடெல்லி: இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை, பாகிஸ்தான் தாக்குதலுக்கான பதிலடி, போர் நிறுத்தம் குறித்து நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “அணு ஆயுத தாக்குதல் என்ற மிரட்டலை எல்லாம் இந்தியா பொறுத்துக் கொள்ளாது” என்று பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்
பிரதமர் மோடி திங்கள்கிழமை இரவு நிகழ்த்திய உரையில், “கடந்த சில தினங்களுக்கு முன் நம் நாட்டின் ராணுவத் திறனையும், அதன் கட்டுப்பாட்டையும் பார்த்தோம். நான் முதலில் இந்தியாவின் வீரம் மிகுந்த படைகளுக்கும், ஆயுதம் தாங்கிய படை வீரர்களுக்கும். நமது உளவுத் துறையினருக்கும், நமது விஞ்ஞானிகளுக்கும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் தரப்பிலிருந்தும் சல்யூட் தெரிவித்துக் கொள்கிறேன்.