
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்தப் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் ஜம்மு – காஷ்மீர் எல்லையில் இருக்கும் தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். இதையடுத்து இரு நாடுகளும் தாக்குதல்களை நடத்த நாடு முழுவதும் போர் பதற்றம் ஏற்பட்டது.
இரண்டு நாடுகளுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தி இந்த சூழலை கட்டுக்குள் கொண்டுவர முயல்வதாக அமெரிக்கா தொடர்ந்து பேசிவந்தது. இதையடுத்து கடந்த மே 10 ம் தேதி தாக்குதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பஹல்கம் தாக்குதலுக்குபிறகு பிஹாரில், “தீவிரவாதிகளையும், அவர்கள் பின்னால் இருப்பவர்களையும் விரைவில் கண்டிபிடித்துக் கடுமையாக தண்டனை வழங்கப்படும்” என்று பேசியிருந்தார்.
தற்போது சிந்தூர் ஆபரேஷனுக்குப் பிறகு பேசியிருக்கும் மோடி, “கடந்த சில நாட்களில் நாட்டின் திறமையையும் பொறுமையையும் நாம் அனைவரும் கண்டோம். ஆயுதப்படைகள், ராணுவம், உளவுத்துறை மற்றும் விஞ்ஞானிகளுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். நம் ஆயுதப் படைகளின் இந்த வீரம், துணிச்சலை நமது நாட்டின் ஒவ்வொரு தாய்க்கும், சகோதரிகளுக்கும், ஒவ்வொரு மகள்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்.

‘ஆபரேஷன் சிந்தூர்’ வெறும் பெயரல்ல
பஹல்காம் தாக்குதல் பெரும்வேதனைக்குரிய சம்பவம். அந்தக் கொடூர தாக்குதலை நடத்திய பயங்ரவாதிகளை ஒழித்துக்கட்ட சிந்தூர் ஆபரேஷனை நடத்தினோம். பயங்கரவாதத்தை ஒழிக்க நம் ஆயுதப் படைகளுக்கு சுதந்திரம் வழங்கினோம். அவர்கள் வீரத்துடனும், துணிச்சலுடனும் செயல்பட்டதை நாம் எல்லோரும்க் பார்த்தோம். ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்பது வெறும் பெயரல்ல, அது நம் நாட்டு உணர்வின் அடையாளம்.
” என்று பேசிவருகிறார்.
மோடியின் உரையைத் தொடர்ந்து வாசிக்க விகடனுடன் இணைந்திருங்கள்…