• May 12, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதல் தணிந்துள்ள நிலையில், இந்தியா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரால் ஈர்க்கப்பட்டு, உத்தரப் பிரதேசத்தில் பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு அவரது குடும்பத்தினர் `சிந்தூர்’ எனப் பெயரிட்டுள்ளனர். இது, இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் மே 10, 11 ஆகிய தேதிகளில் குஷிநகர் மருத்துவக் கல்லூரியில் பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு `சிந்தூர்’ என குடும்பத்தினர் பெயரிட்டுள்ளனர் என்று மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஆர்.கே.ஷாஹி தெரிவித்தார். பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுத்தற்காக இந்திய ஆயுதப் படைகளைப் பாராட்டிய குஷிநகரைச் சேர்ந்த அர்ச்சனா ஷாஹி என்பவர் தனது மகளுக்கு ராணுவ நடவடிக்கையின் பெயரான ‘சிந்தூர்’ என வைத்துள்ளதாக கூறினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *