• May 12, 2025
  • NewsEditor
  • 0

கடலூர் / மேட்​டூர்: நெய்​வேலி அனல் மின் நிலை​யத்​தில் நேற்று டிரான்​ஸ்​பார்​மர் வெடித்து தீ பரவியது. இதில் ரூ.1 கோடி மதிப்​பிலான பொருட்​கள் சேதமடைந்​தன. கடலூர் மாவட்​டம் நெய்​வேலி​யில் உள்ள என்​எல்சி இந்​தியா நிறு​வனத்​தின் 2-ம் அனல் மின் நிலைய விரி​வாக்​கத்​தில் நேற்று அதி​காலை டிரான்​ஸ்​பார்​மர் வெடித்து தீ பரவியது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்​கள் 4 வாக​னங்​களில் சென்று தீயை அணைத்​தனர்.

விபத்​தின்​போது என்​எல்சி அதி​காரி​கள், ஊழியர்​கள், ஒப்​பந்த தொழிலா​ளர்​கள் யாரும் அங்கு பணி​யில் இல்​லாத​தால், அசம்​பா​விதம் தவிர்க்​கப்​பட்​டது. அதிக வெப்​பம் காரண​மாக டிரான்​ஸ்​பார்​மர் வெடித்து விபத்து நேரிட்​டிருக்​கலாம் என்று கூறப்​படு​கிறது. இந்த விபத்​தில் காப்​பர் வயர் உட்பட ரூ.1 கோடி மதிப்​பிலான பொருட்​கள் எரிந்து சேத​மாகி​யுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *