• May 12, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ம​கா​ராஷ்டிர மாநிலம் புனே​வில் உள்ள டிஆர்​டிஓ அமைப்​பின் பொறி​யியல் பிரிவு தலை​வர் டலோலி கூறிய​தாவது: போர்க்​களம் மற்​றும் ராணுவ நடவடிக்​கை​களின்​போது வீரர்​களின் உயி​ரிழப்பை தடுக்க ரோபோக்​களை பயன்​படுத்த திட்​ட​மிடப்​பட்டு உள்​ளது. இதற்​காக மனிதர்​களை போன்ற ரோபோ வீரர்​களை தயார் செய்​யும் பணி​யில் தீவிர​மாக ஈடு​பட்​டிருக்​கிறோம்.

கடந்த 4 ஆண்​டு​களாக மாதிரி ரோபோக்​களை தயார் செய்​திருக்​கிறோம். இந்த ரோபோக்​கள் கடின​மான மலைப்​பகு​தி​களில் எளி​தாக ஏறிச் செல்​லும். நாம் பிறப்​பிக்​கும் உத்​தர​வு​களை ஏற்று செயல்பட ரோபோக்​களில் புதிய தொழில்​நுட்​பங்​களை புகுத்தி வரு​கிறோம். இவ்​வாறு டலோலி தெரி​வித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *