
புதுடெல்லி: மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள டிஆர்டிஓ அமைப்பின் பொறியியல் பிரிவு தலைவர் டலோலி கூறியதாவது: போர்க்களம் மற்றும் ராணுவ நடவடிக்கைகளின்போது வீரர்களின் உயிரிழப்பை தடுக்க ரோபோக்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக மனிதர்களை போன்ற ரோபோ வீரர்களை தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறோம்.
கடந்த 4 ஆண்டுகளாக மாதிரி ரோபோக்களை தயார் செய்திருக்கிறோம். இந்த ரோபோக்கள் கடினமான மலைப்பகுதிகளில் எளிதாக ஏறிச் செல்லும். நாம் பிறப்பிக்கும் உத்தரவுகளை ஏற்று செயல்பட ரோபோக்களில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி வருகிறோம். இவ்வாறு டலோலி தெரிவித்தார்.