• May 11, 2025
  • NewsEditor
  • 0

சேலம்: சித்ரா பவுர்ணமி கிரிவலத்தையொட்டி, திருவண்ணாமலை செல்வதற்கு வந்த பக்தர்கள், பேருந்துகளில் இடம் பிடிப்பதற்காக சேலம் புதிய பேருந்து நிலையத்தில் அலைமோதியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலையும், அங்குள்ள மலையையும் பவுர்ணமி நாளில் வலம் வந்து வழிபடுவது, நற்பலன்களை அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால், மாதந்தோறும் பவுர்ணமி நாளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் திருவண்ணாமலைக்கு சென்று வருகின்றனர். பவுர்ணமிகளில், சித்ரா பவுர்ணமி வழிபாடு மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *