• May 11, 2025
  • NewsEditor
  • 0

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’, ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ ஆகிய படங்கள் இந்தி மார்க்கெட்டை குறிவைத்து புதிய ஒப்பந்தத்தில் களமிறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்திய அளவில் பிவிஆர்- ஐநாக்ஸ், சினிபோலிஸ் ஆகிய நிறுவனங்கள் அதிக மல்டி பிளக்ஸ் திரையரங்குகளை நடத்தி வருகின்றன. இந்த நிறுவனங்கள், தென்னிந்தியாவில் இருந்து பான் – இந்தியா முறையில் வெளியாகும் படங்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதில் ஒன்று, திரையரங்கில் படம் வெளியாகி, 8 வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடி தளங்களில் படங்களை வெளியிட வேண்டும் என்பது. இதை
ஏற்றுக்கொண்டால் மட்டுமே வட இந்தியாவில் அதிக மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை வைத்திருக்கிற இந்நிறுவனங்கள், சம்மந்தப்பட்ட படங்களின் இந்திப் பதிப்பை திரையிடும். அப்படித்தான் ‘புஷ்பா’ உள்பட சில படங்கள் அங்கு வெளியாகின.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *