
சென்னை: 'நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் செயல்பட்ட பிரதமர் மோடிக்கு நன்றி!' என்று தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 'இந்திய அரசும், பாரதப் பிரதமரும் இந்திய நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை ஒடுக்கும் விதமாக செயல்பட்டதற்கும், இந்தியாவிற்கு வெற்றியாக அமைந்திருப்பதற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.