
காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த மாதம் 22-ம் தேதி, 26 சுற்றுலாப் பயணிகளை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. இதனால் எல்லையில் போர் பதற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இசை அமைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா, தனது ஒரு மாத சம்பளத்தைத் தேசிய பாதுகாப்பு நிதிக்குக் கொடுப்பதாக அறிவித்துள்ளார்.