
புதுடெல்லி: பிஹாரின் பக்ஸரில் மணமான மறுநாளே எல்லைப் பாதுகாப்புப் பணிக்கு கிளம்பியுள்ளார் ராணுவ வீரர் ஒருவர். இதற்காக தன் கணவரை பெருமிதத்துடன் வழியனுப்பியுள்ளார் மணப்பெண்.
இந்திய ராணுவப் படையின் வீரர் என்பது பெருமைக்குரிய விஷயம். இப்பணியில் போரின்போது தேசத்துக்கு சேவை செய்வது ராணுவ வீரரின் கடமை. இதை உணர்த்தும் வகையில் பிஹாரின் பக்ஸர் மாவட்டத்தின் நந்தன் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரரான தியாகி யாதவ் வாழ்க்கை அமைந்துள்ளது. இந்திய எல்லை மாநிலமான காஷ்மீரின் ஸ்ரீநகரில் அவர் பணியமர்த்தப்பட்டு உள்ளார். இளைஞரான அவர் தன் திருமணத்துக்காக விடுப்பு எடுத்துக் கொண்டு பக்ஸர் வந்திருந்தார். இவருக்கு வெள்ளிக்கிழமை திருமணம் முடிந்தது.