
கடந்த 22 ஆம் தேதி தொடங்கிய 18-வது ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது.
இதனிடையே இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
மேலும் ஐபிஎல் தொடர் ஒருவாரக் காலத்திற்கு நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்திருந்தது.
தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தாக்குதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இருப்பதால் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.
இந்நிலையில் போட்டி தொடங்குவது குறித்து ஐபிஎல் தலைவர் அருண் துமல் பேசியிருக்கிறார். “ போர் நிறுத்தம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்துவது குறித்து ஆலோசிக்கிறோம்.

உடனடியாக தொடரை தொடங்க முடிந்தால் போட்டி நடைபெறும் இடங்கள், தேதி உள்ளிட்டவற்றை திட்டமிட வேண்டும். அணியின் உரிமையாளர்கள் மற்றும் ஒன்றிய அரசிடம் இது குறித்து கலந்தாலோசிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs