
கடந்த 2014-ம் ஆண்டில் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அப்போது முதல் நாட்டின் பாதுகாப்புக்கு அவர் முதலிடம் அளித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் முப்படைகளையும் சர்வதேச தரத்துக்கு அவர் நவீனப்படுத்தி உள்ளார்.அமெரிக்காவின் அழுத்தத்தை மீறி ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணைகளை வாங்கினார். தற்போது பாகிஸ்தானுடனான சண்டையில் இந்த ஏவுகணைகள் முக்கிய பங்காற்றின.
இதேபோல இந்திய விமானப் படைக்காக பிரான்ஸிடம் இருந்து அதிநவீன ரஃபேல் போர் விமானங்களை வாங்கினார். இந்த போர் விமானங்கள் பாகிஸ்தானுக்கு சிம்மசொப்பனமாக விளங்குகின்றன. பிரதமர் மோடியின் ஆட்சிக் காலத்தில் ஐஎன்எஸ் விக்ராந்த் உட்பட ஏராளமான போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டு உள்ளன. 60-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.