• May 11, 2025
  • NewsEditor
  • 0

தமிழக அரசின் உதவியால் பஞ்சாபில் சிக்கி தவித்த 13 கல்லூரி மாணவ, மாணவிகள் சென்னை திரும்பினர்.

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டதால், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி படிக்க சென்ற 9 மாணவர்கள், 4 மாணவிகள் தமிழக அரசு உதவியுடன் நேற்று இரவு டெல்லி அழைத்துவரப்பட்டனர். டெல்லியில் இருந்து மாணவர்கள் நேற்று விமானம் மூலம் சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில் மாணவர்களை அயலகத் தமிழர் நலத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர், அவர்கள் அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்கள் மூலம் நாமக்கல், கோவை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *