
‘கூலி’ மற்றும் ‘தக் லைஃப்’ படக்குழுவினரின் புதிய முயற்சியால் இந்தியில் பெரியளவில் ஓப்பனிங் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னிந்திய படங்களின் ஓடிடி உரிமை விற்கப்படும்போது 4 வாரத்தில் ஓடிடியில் வெளியிடலாம் என்று ஒப்பந்தம் போட்டுக் கொள்வார்கள். அதே போல் சரியாக ஒரு மாத இடைவெளியில் ஓடிடி தளத்திலும் வெளியாகிவிடும். ஆனால், இந்தியில் அப்படியல்ல. ஓடிடியில் 8 வாரங்கள் கழித்து வெளியிட ஒப்பந்தம் போட்டிருந்தால் மட்டுமே மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் வெளியிட முடியும். இதனால் பல தென்னிந்திய படங்கள் சரியான வெளியீடு இல்லாமல் இந்தியில் தடுமாறி இருக்கின்றன.