
கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ம் தேதி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 19 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அந்த தாக்குதல் நடந்து 11 நாட்களுக்கு பிறகு உரி சர்ஜிக்கல் தாக்குதலை இந்தியா நடத்தியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் சுமார் 50 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி புல்வாமாவில் பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். ஜெய்ஷ் இமுகம்மது இயக்கத்தின் தற்கொலைப் படை இந்த தாக்குதலை நடத்தியது. அதற்கு பதிலடியாக 13 நாட்கள் கழித்து இந்தியா சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியது.