
ரஷ்யாவிடம் இருந்து அதிநவீன எஸ்-400 பாதுகாப்பு கவசத்தை வாங்க கடந்த 2018-ம் ஆண்டில் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதன்படி ஐந்து எஸ்400 பாதுகாப்பு கவசங்களை ரஷ்யா வழங்க வேண்டும். இதுவரை மூன்று எஸ்400 பாதுகாப்பு கவசங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.
இவை பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைப் பகுதிகளில் நிறுவப்பட்டு இருக்கிறது. மீதமுள்ள இரண்டு எஸ்400 பாதுகாப்பு கவசங்கள் அடுத்த ஆண்டில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.