• May 10, 2025
  • NewsEditor
  • 0

தேர்தல் வரப்போகிறது என்றாலே அரசுப் பணியின் அந்திம காலத்தில் இருக்கும் பலரும் ஆர்வமாய் அரசியல் களத்துக்கு வருவார்கள். விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு, தாங்கள் விரும்பும் கட்சியில் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கேட்பார்கள். சிலருக்கு லக் அடிக்கும்; பலருக்கு பக் என்றாகிவிடும். பரமக்குடி பாலு இதில் இரண்டாவது ரகம்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தனி தொகுதிக்குள் வரும் போகலூர் ஒன்றியம் முத்துவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் முனைவர் எஸ்.பாலு. தென்காசியில் மாவட்டப் பதிவாளராக இருந்த பாலு, 2021 தேர்தலை மனதில் வைத்து பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். மாணவப் பருவத்திலிருந்தே திமுக அனுதாபியாக இருந்துவந்த பாலு, பரமக்குடி தனி தொகுதியில் போட்டியிடும் திட்டத்தில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு திமுக-வில் இணைந்தார். அதன் பிறகு பரமக்குடி திமுக-வில் பரபர அரசியல்வாதியான பாலு, கட்சிக்காக கோடிகளை செலவழித்தார். பரமக்குடியில் ‘ஸ்டாலின் தான் வாராரு’ கூட்டத்தை ‘பிரமாதப்’ படுத்தியதில் பாலுவுக்கு பெரும் பங்குண்டு என்று சொல்வார்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *