தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள குமாரபுரத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி பார்வதி.

பெரியசாமி, அதே பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இவர்களுக்கு 8 வயதில் ஸ்ரீதேவ் என்ற மகனும், மூன்று வயதில் ஆதிரா என்ற பெண் குழந்தையும் உள்ளன.

தற்போது பள்ளி விடுமுறை என்பதால், ஸ்ரீதேவ் பெரியசாமியின் பெற்றோர் வீட்டில் உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவில் பெரியசாமியின் மனைவி பார்வதி தனது மகள் ஆதிராவுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட ஆதிரா

அப்போது மர்ம நபர் ஒருவர், பெரியசாமியின் வீடு புகுந்து பார்வதியின் நகையைப் பறிக்க முயன்றதாகவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் மகள் ஆதிராவைக் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாகவும் கூறப்பட்டது.

பார்வதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டனர். அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் குழந்தையைத் தூக்கிச் சென்றபோது குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, திருச்செந்தூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், இச்சம்பவத்தில் அதிரடி திருப்பமாகப் பார்வதியிடம் கிடுக்கு பிடி விசாரணை நடத்தியதில், தாய் பார்வதிதான் குழந்தை ஆதிராவைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீஸாரிடம் விசாரித்தோம், “பார்வதி, கடந்த ஓராண்டுக்கும் மேலாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையிலிருந்து வந்துள்ளார். நெல்லையில் உள்ள ஒரு தனியார் மனநல மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

திருச்செந்தூர் காவல் நிலையம்
திருச்செந்தூர் காவல் நிலையம்

கடந்த சில நாட்களாகவே அதிகமாக மன நிலை பாதிக்கப்பட்டு கணவருடன் சண்டை போடுவதும், பொருட்களை உடைப்பதுமாக இருந்துள்ளார்.

இந்த நிலையில்தான், விளையாட்டு சாமான் கேட்டு அழுத மகள் ஆதிராவைப் பார்வதி கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

விசாரணையில் அவரே ஒப்புக் கொண்டுள்ளார். குழந்தை இறந்தது தெரிந்தபிறகு நகைக்காக தன்னை யாரோ மிரட்டியதாகவும், நகையைத் தர மறுத்ததால் குழந்தையைக் கொன்றதாகவும் கூறி நாடகமாடியுள்ளார்” என்றனர்.  

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *