
திண்டுக்கல்: “மத்திய பாஜக அரசு கடைப்பிடிக்கும் தாராளமயம், தனியார் மய கொள்கைகளைத் தான் தமிழ்நாடு அரசும் கடைப்பிடிக்கிறது” என மா.கம்யூ., மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இன்று (மே 9) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மே 20-ம் தேதி நடைபெறும் வேலைநிறுத்தத்தில் திமுக தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன. தமிழக மக்கள் இந்த வேலைநிறுத்தத்துக்கு பேராதரவை அளிக்க வேண்டும்.