
மகாராஷ்டிரா மாநிலம் சந்திராப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாஷிம் கான், ஷேக் கதிர் மற்றும் ஒரு மைனர் சேர்ந்து, பெண் ஒருவரைக் கடத்தி சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
2014ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் குறித்து விசாரித்த சந்திராப்பூர் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இத்தீர்ப்பை எதிர்த்து மூவரும் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் மேல் முறையீடு செய்தனர். இம்மனு நீதிபதிகள் நிதின் சூர்யவன்சி, மகேந்திர சந்த்வானி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இதில் குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்ட வாசிம் கானுடன் ஏற்கனவே பாதிக்கப்பட்ட பெண் விருப்ப உறவு வைத்திருந்ததாகவும், அதன் பிறகு வேறு ஒருவருடன் லிவ் இன் உறவில் வாழ்ந்ததாகவும், அதோடு அப்பெண் திருமணமானவர் என்றும் வாதிட்டார்.
ஆனால் அந்த வாதங்களை நீதிபதிகள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். “லிவ் இன் உறவுக்கு முன்பு சம்பந்தப்பட்ட பெண் வாசிமுடன் உறவு வைத்திருந்தாலும், அப்பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவருடன் உறவு வைத்துக்கொள்ள முடியாது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் ஒழுக்கமோ அல்லது அவரின் கடந்த கால செயல்களோ அவர் உறவுக்கு முடியாது என்று சொல்வதற்கான உரிமையை மறுக்கவில்லை. ஒரு பெண் தாம்பத்திய உறவுக்கு முடியாது என்று சொல்லிவிட்டால் முடியாதுதான்.
அதன் பிறகுக் கட்டாயப்படுத்திச் செய்யப்படும் எந்த ஒரு காரியமும் குற்றம்தான். இவ்விவகாரத்தில் பெண்ணின் சம்மதத்தை மதிப்பீடு செய்வதில் அவரது நடத்தையோ அல்லது அவர் பாலியல் உறவு வைத்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது” என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குக் கீழ் கோர்ட் விதித்த தண்டனையை உறுதி செய்தும் உத்தரவிட்டனர். நீதிபதிகளின் இத்தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY