
முதல் பார்வையில், ‘ஆபரேஷன் சிந்தூர்' என்பது பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 இடங்களில் ஒருங்கிணைந்த தாக்குதலாகத் தெரிகிறது. ஆனால் இந்த நடவடிக்கை, இந்திய சமூகம் மற்றும் அரசியல் பற்றி ஆழமானப் புரிதலுடன் பிரதமர் நரேந்திர மோடியால் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 22-ல் பஹல்காமில் பாகிஸ்தான் தொடர்புடைய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். மணமான இந்துப் பெண்களின் நெற்றித் திலகம் துடைக்கப்பட்ட துயரம் நிகழ்ந்தது. இதற்கு 15 நாட்களில் மே 7-ல் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இதற்கானப் பெயரை இந்திய ராணுவம் முதன்முறையாக கவனமாக சிந்தித்தது. காரணம் இந்த நடவடிக்கையை இந்திய மக்களுடன் உணர்வுபூர்வமாக இணைக்கவும் விரும்பியது. இதற்கு பிரதமர் மோடியே யோசித்து 'ஆபரேஷன் சிந்தூர்’ எனப் பெயரிட்டிருந்தார். இந்த தாக்குதல் பாகிஸ்தானுக்கு கற்பனை செய்து பார்த்திராத சேதத்தை ஏற்படுத்தி விட்டது.