பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்  இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதலை நடத்தியது.

இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் இந்தியாவின் ஜம்மு, பதான்கோட் உள்ளிட்ட சில நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கும்  இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது.

Operation Sindoor

எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்த முயற்சி செய்த ட்ரோன்கள், போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தி இருக்கிறது. பாகிஸ்தானின் தாக்குதல் சதி திட்டங்களை இந்தியா திறம்பட முறியடித்து வருகிறது.

இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் தொடர்ந்து வருவதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் டிக்கெட்டுகளை கட்டணமின்றி ரத்து செய்யலாம் என்று இண்டிகோ நிறுவனம் அறிவித்திருக்கிறது.

இண்டிகோ நிறுவனம்
இண்டிகோ நிறுவனம்

ஸ்ரீநகர், ஜம்மு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் விமான டிக்கெட்டுகளை கட்டணமின்றி ரத்து செய்துகொள்ளலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.  மேலும் பாகிஸ்தான் வழி செல்லும் விமானங்களை ஜூன் 14 ஆம் தேதி வரை நிறுத்தி வைத்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *