
புதுடெல்லி: அரசியல் கட்சிகளை ஆர்டிஐ வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என தொடரப்பட்ட பொது நல வழக்கின் இறுதி விசாரணையை உச்ச நீதிமன்றம் நேற்று ஒத்திவைத்தது.
தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளை ஆர்டிஐ வரம்புக்குள் கொண்டு வரக்கோரி கடந்த 2015 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) என்ற தொண்டு நிறுவனம், வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் சார்பில் இரண்டு பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.