
புதுடெல்லி: வியாழக்கிழமை இரவு இந்தியா மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் உயிரிழப்பு, பொருட் சேதம் ஏதும் இல்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்புத்துறையின் செய்தித் தொடர்பாளரின் எக்ஸ் தள கணக்கில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜம்மு, பதன்கோட், உதம்பூரில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து வியாழக்கிழமை இரவு சுமார் 8.20 மணி அளவில் பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் முயற்சியை நடத்தியது. எல்லை பகுதியில் இருந்து இந்த முயற்சி நடந்தது.