
நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பைத் தீவிரப்படுத்த விமானப் போக்குவரத்து பாதுகாப்புத் துறை உத்தரவிட்டிருக்கிறது.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை நடத்தியது.
இந்தப் பதில் தாக்குதலால், நேற்றிரவு இந்தியாவின் 15 நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தானிலிருந்து ட்ரோன்கள், ஏவுகணைகள் வந்ததாகவும், இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்ததாகவும் மத்திய அரசு இன்று தெரிவித்தது.
இத்தகைய பதட்டமான சூழலில், இன்றிரவு 9 மணியளவில் ஜம்மு காஷ்மீர் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வெளி தாக்குதலை இந்தியா முறியடித்திருக்கிறது.
பாதுகாப்பு கருதி இன்று பஞ்சாப் vs டெல்லி இடையே நடைபெற இருந்த ஐ.பி.எல் போட்டி கைவிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க விமானப் போக்குவரத்து பாதுகாப்பு துறை (BCAS) உத்தரவிட்டிருக்கிறது.
பயணிகளைத் தீவிர சோதனைக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்திருக்கிறது. விமான நிலைய முனையங்களில் பார்வையாளர்கள் வருகைக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs