ராஜபாளையம்: “தமிழக மக்களை பாதுகாக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜூன் 11 முதல் 20-ம் தேதி வரை 10 நாட்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளது” என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

ராஜபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியது: “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில குழு கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழல், மக்கள் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது. மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை கண்டித்து மே 20-ம் தேதி நடைபெறும் வேலைநிறுத்தத்தில் ரயில் மறியல் மற்றும் மத்திய அரசு அலுவலகம் முன் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் தாராளமய கொள்கை மூலம் விலைவாசி உயர்ந்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *