
புதுடெல்லி: எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தானுடனான மோதல்களைத் தொடர்ந்து மே 10-ம் தேதி வரை, நாட்டிலுள்ள குறிப்பாக வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் உள்ள 21 விமான நிலையங்கள் மூடப்படுகின்றன.
சிவில் விமான போக்குவரத்து அமைச்சக வட்டாரங்களின் தகவல்கள் படி, இந்த விமான நிலையங்கள் மே 10-ம் தேதி அதிகாலை 5.29 மணி வரை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.