
சென்னை: தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ரூ.1,000 கோடி வரை விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
மாதவரம் பால் பண்ணையில் உள்ள ஆவின் திறன் மேம்பாட்டு மைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆவின் கால்நடை சேவை மையத்தை பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று திறந்து வைத்தார்.