
சென்னை: சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணு மின்நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை நேற்று நடைபெற்றது. காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் முகாம்களின் மீது இந்திய ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்கி அழித்தது. இதை தொடர்ந்து மத்திய அரசின் அறிவுறுத்தல்படி, தமிழகத்தில் சென்னை துறைமுகம், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை நேற்று நடைபெற்றது.