
பாட்னா: நாடு முழுவதும் இன்று மேற்கொள்ளப்பட்ட போர்க்கால பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்பதாக தனது திருமண கொண்டாட்டங்களை பிஹாரைச் சேர்ந்த மணமகன் ஒருவர் ரத்து செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிஹாரின் பூர்னியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுஷாந்த் குஷ்வாஹா. இவருக்கு புதன்கிழமை (மே 07) திருமணம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு அராரியா மாவட்டத்தில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள மணப்பெண்ணில் வீட்டுக்கு "பராத்" எனப்படும் திருமண கொண்டாட்டத்துக்காக சுஷாந்த் புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது.