
சென்னை: சென்னையில் நேற்றிரவு மாரடைப்பால் உயிரிழந்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத்துக்கு தமிழக அரசின் சார்பில் காவல்துறை அணிவகுப்புடன் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக அவரது உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியவர் ஜெ.சத்யநாராயண பிரசாத் (56). நீதிபதிகளுக்கான பணிமூப்பு தரவரிசைப்பட்டியலில் 42-வது இடத்தில் உள்ளார்.