காஞ்சிபுரம் அடுத்த முருகன் குடியிருப்பு பகுதியில் வேகவதி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்தின் பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதால் விரைவாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உள்ளூர் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 27-வது வார்டில் தாட்டிதோப்பு எனப்படும் முருகன் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இங்கு, அண்ணாநகர், செல்லியம்மன் நகர், பல்லவர் நகர் உட்பட பல்வேறு நகர் பிரிவுகள் அமைந்துள்ளன. இங்கு, சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் மற்றும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பலர் நெசவுத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *