சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநகரப் பேருந்தில் பயணம் செய்து, “மகளிர் விடியல் பயணத் திட்டம்.” குறித்து பயணிகளிடம் உரையாடினார். அப்போது முதல்வர், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம், முறையாக பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி பெண் பயணிகளை ஏற்றிச் செல்லவும், பேருந்தின் முழு கொள்ளளவு பயணிகளோடு பயணத்தை தொடர வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு இன்று (மே 7) பொறுப்பேற்று நான்காண்டுகள் நிறைவு பெற்று, ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *