புதுடெல்லி: பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலை வரவேற்றுள்ள பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சுபம் திவேதியின் மனைவி, இதுதான் தன் கணவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். உத்தர பிரதேசத்தின் கான்பூரைச் சேர்ந்த 31 வயது தொழிலதிபர் சுபம் திவேதியும் இதில் ஒருவர். அவர் தனது மனைவியுடன் பஹல்காமுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், மனைவி கண் முன்னே கொல்லப்பட்டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *